Saturday, January 8, 2011

காவலன் படத்தை திரையிட மறுப்பதா? தியேட்டர் உரிமையாளர்களுக்கு கலைப்புலி சேகரன் கண்டனம

Asin and Vijay
விஜய் நடித்த காவலன் படத்தை திரையிட மறுப்பது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கலைப்புலி சேகரன் மற்றும் சங்கத்தின் செயலாளர் செல்வின் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் திரைப்பட தொழிலில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விதமாக திருச்சியில் தமிழ்நாடு திரை யரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு விநியோ கஸ்தர்கள் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது.

தொழில் என்றால் நஷ்டமும் உண்டு. லாபமும் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி பொருளை விற்க முடியாது. அப்படி விற்றால் அது வியாபாரமாகாது. இஷ்டப்பட்டு தான் வியாபாரங்கள் நடக்கின்றன. லாபம் எனக்கு. நஷ்டம் உனக்கு என்று கோரிக்கை வைப்பது தொழில் அடிப்படையைத் தகர்க்கும் செயல். 

தயாரிப்பாளர்கள் படத்தை எம்.ஜி. முறையிலோ அவுட் ரேட் முறையிலோ வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்க முடி யாது. விநியோகஸ்தர்களும் அதே முறையில் வாங்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது இல்லை.

நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கேட்பது போல் ரசிகர்களும் படம் பிடிக்கவில்லை என பணத்தைத் திருப்பிக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா? காவலன் திரைப்படம் வாயிலாக எங்கள் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எதிரான முரண்பாடான அறிக்கை கொடுப்பதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது.

திரைப்பட புகை ண்டி தடம் புரளாமல் ஓட துணை புரிய வேண்டுமேயின்றி தடம் புரள காரணமாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்."

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய்யின் படங்களுக்கு மட்டுமில்லாமல் அவருக்கு ஆதரவளிக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படங்களுக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்துதான் விநியோகஸ்தர்கள் சங்கம் களத்தில் இறங்கியுள்ளது.

இதற்கு முன்பு குசேலன் படம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து பிரச்சினை செய்தபோது, கலைப்புலி சேகரன் மற்றும் ராம நாராயணன் இணைந்து அப்பிரச்சினை தீர உதவியது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment